என்ன படிக்க வைக்கலாம் ?
வளரிளம்
பருவத்தில் குழந்தைகள் இருக்கும் அனைவரின் முன்னிற்கும் ஒரு பெருங்கேள்வி.
ஒவ்வொரு துறைகளில் கால மாறுதல்கள் மூலம் வரும் வேலை வாய்ப்புகளும்,
வேலையின்மைகளும் செய்தி வியாபாரிகளின் பரபரப்புத் தகவல்களும் , கல்வி
வியாபாரிகளின் மயக்குப்பேச்சுகளும், அக்கம் பக்கம் மற்றும் சுற்றத்தோரின்
அழுத்தங்கள் என ஆபத்தான அரங்கு.
எப்படி ஒரு மேற்படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கான சில சிந்தனைகளின் பதிவிது.
இன்றைய
கல்வித்திட்டத்தில் மேல் நிலை பள்ளிக்கல்வி முடிக்கும் ஒரு
மாணவன்/மாணவியின் முன் மிகப் பிரகாசமான வாய்ப்புகள் திறந்திருக்கின்றன.
ஒவ்வொரு பிரிவையும் அதன் நிறை/குறையையும் இங்கு கொஞ்சம் அலசுவோம். (பி.கு. துறை வாரியாக, அதாவது பொறியியல், மருத்துவம், கணக்காளுதல் / பொருளாதாரம் என எடுத்துக்கொண்டு நிறை குறை அலசப்புறப்பட்டேன். பின் அதன் ஆழமும் அகலமும் தெரிந்து, வேறு சில சொல்லி நிறுத்தினேன் :) )
ஏதேனும் தொழிலக - கல்வியக ஒத்துழைப்பு நடந்து கொண்டிருக்கின்றதா? (industry - institution co-operation /partnership , internships )
மேற்கூறியவற்றின்
பயன் நான்காவதாக அதன் placement ல் நன்கு தெரியும். core companies
எவ்வளவு பேரை வேலைக்கெடுத்துள்ளனர், என்னென்ன மாதிரி வேலைகளுக்கு என்பது
ஒரு முக்கிய தகவல். முடிந்தால் 2 batchற்கு முன்னால் place ஆனவர்களது
தொடர்பெண் / மின்னஞ்சல் கிடைத்தால் அவர்களைத் தொடர்பு கொண்டால் கிட்டத்தட்ட
சரியான ஒரு படம் கிடைத்து விடும். தற்போதைய batch ன் கருத்துக்களும்
முக்கியம். (இதுபோன்ற தகவல் சேகரிப்பு குழுவாக செய்து பகிர்ந்து கொள்வதே
சாத்தியம்)
IT / கணினியியல் படிப்பதும் அத்துறையில்
ஏதேனும் உருவாக்குவதற்காக இருக்க வேண்டும். உருவாக்கும் வாய்ப்பு தராத
படிப்பும் வேலையும், எவ்வளவு அதிக சம்பளம் தரும் வேலையைக்கொடுத்தாலும்
விரைவிலேயே பிரச்சினைகளில் கொண்டுவிடும்.
உலக அளவில், உலகத்தரத்தில், நம்மூரில் உட்கார்ந்தபடியே உருவாக்க கணினியியல் (அதிலும் செயலி ஆக்கம்) போல் உகந்தது வேறொன்றும் தெரியவில்லை
முன்பெல்லாம் பத்தாவது/பன்னிரெண்டாவது படித்தவுடன் தட்டச்சு / குறுக்கெழுத்து படிக்க வைத்து விடுவார்கள். அதுபோல கல்லூரிப்படிப்பு முடிவதற்குள் செயலியாக்கம் அறிந்திருக்க வேண்டும். செயலியாக்கம் (software development மற்றும் programming) பற்றிய அடிப்படை அறிவும் ஏதேனும் ஒரு கணினி மொழியில் அடிப்படை செயலியாக்கம் அறிந்திருப்பதும் அனைத்து துறை மேற்படிப்பிற்கும் மிகப்பெரிய competitive advantage கொடுக்கும். கல்லூரி முடிப்பதற்குள் செயலியாக்கம் எந்த ஆழத்தில் முடியுமோ அந்த அளவுக்கு எல்லா துறையினரும் கற்க வேண்டும். இப்போதெல்லாம் ஒரு மடிக்கணினி இருந்தால் இணையம் என்னும் துரோணாச்சாரியார் சொல்லிக்கொடுத்துவிடுவார். (கட்டை விரலெல்லாம் வெட்டிக் கொடுக்க வேண்டாம். கட்டை விரல் உயர்த்தி ஒரு emoticon போட்டால் போதும்.)
உலக அளவில், உலகத்தரத்தில், நம்மூரில் உட்கார்ந்தபடியே உருவாக்க கணினியியல் (அதிலும் செயலி ஆக்கம்) போல் உகந்தது வேறொன்றும் தெரியவில்லை
முன்பெல்லாம் பத்தாவது/பன்னிரெண்டாவது படித்தவுடன் தட்டச்சு / குறுக்கெழுத்து படிக்க வைத்து விடுவார்கள். அதுபோல கல்லூரிப்படிப்பு முடிவதற்குள் செயலியாக்கம் அறிந்திருக்க வேண்டும். செயலியாக்கம் (software development மற்றும் programming) பற்றிய அடிப்படை அறிவும் ஏதேனும் ஒரு கணினி மொழியில் அடிப்படை செயலியாக்கம் அறிந்திருப்பதும் அனைத்து துறை மேற்படிப்பிற்கும் மிகப்பெரிய competitive advantage கொடுக்கும். கல்லூரி முடிப்பதற்குள் செயலியாக்கம் எந்த ஆழத்தில் முடியுமோ அந்த அளவுக்கு எல்லா துறையினரும் கற்க வேண்டும். இப்போதெல்லாம் ஒரு மடிக்கணினி இருந்தால் இணையம் என்னும் துரோணாச்சாரியார் சொல்லிக்கொடுத்துவிடுவார். (கட்டை விரலெல்லாம் வெட்டிக் கொடுக்க வேண்டாம். கட்டை விரல் உயர்த்தி ஒரு emoticon போட்டால் போதும்.)